நாகை மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை கடைதெருவில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கிபிடித்துள்ள மின்கம்பம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்மாற்றியை தாங்கிபிடித்துள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?