வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்பட்டியில் 3 தெருக்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுவதால், மக்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்.