தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-04 12:47 GMT

அரியலூர் அருகே உள்ள பள்ளேரி ஏரி கரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் இந்த வழியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்