மின்கம்பம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-04 12:46 GMT

நாகை மாவட்டம் நாகூர் கடைவீதி பகுதியில் மின்கம்பம் ஒன்று பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்பகுதி மற்றும் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதன்காரணமாக மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சேதமடைந்துள்ள மின்கம்பம் உள்ள பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்