விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிவன் கோவிலில் பொதுமக்கள் வசதிக்காக இலவச நூலகம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால் இங்கு வரும் வாசகர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த நூலகத்தில் தேவையான மின்விளக்குகள் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.