ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் ஊராட்சி பேச்சி ஊருணி கரையில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் மின் கம்பியில் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.