ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி

Update: 2022-08-23 13:18 GMT
கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி அலுவலத்திற்கு அருகில் வெண்ணெய்மலை மெயின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மாற்றி இடிந்து விழுந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்