மதுரை மாநகராட்சி அனுப்பானடி 89வது வார்டு, சூசை மைக்கேல் தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஒளிராத தெருவிளக்குகளை அகற்றி புதிய தெருவிளக்குகளை பொருத்த வேண்டும்.