17 March 2024 2:03 PM GMT
#45238
வீணாகும் குடிநீர்
குரோம்பேட்டை
தெரிவித்தவர்: நவீன்
சென்னை குரோம்பேட்டை, திருநீர்மலை பகுதியில் பாலாறு குடிநீர் குழாய் உள்ளது. இதில் ஏற்பட்ட உடைப்பால் அதிகளவு குடிநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், தண்ணீர் சாலைகளில் குளம்போல் தேங்கியுள்ளது. எனவே, சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வபர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.