1 Dec 2024 7:43 PM GMT
#51909
சாலையில் ஓடும் கழிவுநீர்
மொழுகம்பூண்டி
தெரிவித்தவர்: பெ.முனியாண்டி
ஆரணி தாலுகா மொழுகம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து கழிவுநீரை சாலையில் விடுகின்றனர். அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் சாலையில் விடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பெ.முனியாண்டி, மொழுகம்பூண்டி.