16 Jun 2024 5:53 PM GMT
#47596
சேதமடைந்த சாலை
கடலூர்
தெரிவித்தவர்: பிரபு
நெல்லிக்குப்பம் 9-வது வார்டு அண்ணாமலை தெருவில் உள்ள சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.