Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Nov 2024 8:09 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51547

ஆபத்தான கழிவுநீர் மூடி

ஆபத்தான கழிவுநீர் மூடிகழிவுநீர்

திருப்பூர் ஆலங்காடு பகுதியில் சாலையின் நடுவே கழிவுநீர் கால்வாய் மூடியில் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அடையாளத்திற்கு மரக்கிளையை வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விபத்து ஏற்படுவதற்கு முன்பு மூடியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 8:07 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#51545

மதுப்பிரியர்கள் தொல்லை தாங்க முடியலீங்க...

மதுப்பிரியர்கள் தொல்லை தாங்க முடியலீங்க...மற்றவை

பல்லடம் பஸ் நிலையத்தில் சமீபகாலமாக மது பிரியர்கள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. மது குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையிலும், பஸ்கள் நிறுத்தும் இடங்களிலும் சர்வ சாதாரணமாக மது போதையில் தூங்கி வருகிறார்கள். இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு மது பிரியர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 8:05 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51544

நோய் பரவும் அபாயம்

குப்பை

திருப்பூர்-காங்கயம் சாலையில் உள்ள கே.ஜி. கார்டன் கதிர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். இங்குள்ள மக்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கி வருகிறார்கள். ஆனால் இங்கு முறையாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வருவதில்லை. இதனால் ஒருசிலர் மீண்டும் குப்பைகளை சாலையோரமாக வீசுகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 8:03 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51543

குவிந்த குப்பையால் சுகாதார சீர்கேடு

குவிந்த குப்பையால் சுகாதார சீர்கேடுகுப்பை

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகே உள்ள ஓடையில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கியுள்ள குப்பையில் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 8:01 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51541

சாலை பள்ளத்தால் விபத்து

சாலை

திருப்பூர்-தாரபுரம் சாலையில் தனியார் வங்கி முன்பு சாலையின் நடுவே பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர். மேலும் பள்ளத்தை பார்த்து திடீரென பிரேக் போடுவதால் பின்னால் வரும் வாகனம் முன்னால் செல்லும் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகின்றன. சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளதால் ஏதேனும் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Nov 2024 10:04 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#51362

ஆபத்தான மின்கம்பம் 

மின்சாரம்

ஆபத்தான மின்கம்பம்  திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் தினசரி சந்தை வளாகம் அருகே சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.  இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.  எனவே இந்த மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, காங்கயம்.

மேலும்
ஆதரவு: 31
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Nov 2024 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51361

புதர்களில் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் 

குப்பை

புதர்களில் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்  திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் செடி-கொடிகள் அதிகம் வளர்ந்து புதர்கள் போன்று இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் வரும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாம்பு,தேள் மற்றும் விஷப்பூச்சிகள் சாலையில் நடமாடுவதைக் கண்டு அச்சமடைகின்றனர். எனவே செடி-கொடிகள் சூழ்ந்த புதரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுதாகர், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Nov 2024 10:01 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51360

சாலையில் பாயும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சாலையில் பாயும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு திருப்பூர் கணக்கம்பாளையம் பிரிவு பொங்கு பாளையம் செல்லும் சாலையில் ஒரு தனியார் கம்பெனி உள்ளது. அங்குள்ள கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டில் ஆறாக பாய்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அப்பகுதி மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து கணக்கம்பாளையம் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். -நாகராஜ்,பொங்குபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Nov 2024 10:00 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51359

சாலையில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

சாலையில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி  காலேஜ் ரோடு காவிலிப்பாளையம் பிரிவு சாலையில் உள்ள குடிநீர் குழாயில் சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் குண்டும், குழியுமாக உள்ள சாலையில் தேங்குகிறது. இதனால் இரவு நேரத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் குழி இருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Nov 2024 9:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51358

ஆபத்தான குழி

போக்குவரத்து

ஆபத்தான குழி திருப்பூர் காலேஜ் ரோடு திரு.வி.க. நகர் கே.இ.ஆர். லே-அவுட் பகுதி சாலையில் சாக்கடை பாலத்தில் ஆபத்தான குழி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். குழி இருப்பதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து படுகாயம் அடையும் நிைல உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். -குமார், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 5:43 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51151

சேதப்படுத்தப்படும் கான்கிரீட் சாலை

மற்றவை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் கான்கிரீட் சாலைகள், அலங்கார மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை பார்ப்பதற்கு திருப்பூரை ேமலும் மெருகூட்டுவதாக உள்ளது. ஆனால் முதலுக்கே மோசம் வந்தது போல் தற்போது அங்காங்கே கான்கிரீட் சாலையை உடைத்து குழாய் பதிக்கிறார்கள். அதன்பின்னர் கான்கிரீட் சாலை அப்படியே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அந்த சாலையில் குழி நாளுக்குநாள் பெரிதாகி விபத்து ஏற்படும் நிலை வந்து விட்டது. கான்கிரீட் சாலையை தோண்டுபர்களிடம் உரிய கட்டணத்தை...

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2024 5:41 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51150

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

திருப்பூர் தென்னம்பாளையத்திலிருந்து தெற்கு தோட்டம் செல்லும் சாலையோரம் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, ஈ ெதால்லையும் அதிகரித்து வருகிறது. அந்த சாலை வழியே மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாறு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick