Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Dec 2024 6:47 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#52281

குண்டும், குழியுமான சாலை

சாலை

பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் போயம் பாளையம், பிச்சம்பாளையம் பகுதியில் சாலையின் நடுவில் உள்ள ஆபத்தான குழியால் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் பெற்றோர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே குழியை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 6:43 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#52280

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் கருமாரம்பாளையம் அருகே கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாகவும் உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருவோர் அந்த பள்ளத்தால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜகுமார், மண்ணரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 6:42 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#52279

வளம் பாலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சாலை

திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு அருகே வளம் பாலத்தில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்து விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் அங்கு கூடுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அங்கு கூடும் பொதுமக்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து ஏற்படுவதற்குள் அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருண்குமார், திருப்பூர்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு

திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு அருகே வளம் பாலத்தில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்து விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் அங்கு கூடுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அங்கு கூடும் பொதுமக்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து ஏற்படுவதற்குள் அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்குமார், திருப்பூர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 6:40 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#52278

விபத்து அபாயம்

கழிவுநீர்

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் இருந்து பட்டுக்கோட்டையார் நகர் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாயில் சாலை சரிந்து விழுந்துள்ளது. இதனால் இந்த வழியே வாகனங்கள் வந்தால் எதிரே வருபவர்கள் ஒதுங்கக் கூட முடியாத நிலை உள்ளது. மேலும் இங்கு உள்ள பனியன் நிறுவனங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வருகிறது. ஏதேனும் வாகனங்கள் விபத்திற்குள்ளாவதற்குள் மற்றும் சாலை மேலும் சேதமாவதற்கு முன்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன், பெரிச்சிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 6:38 PM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#52277

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

திருப்பூர் தாராபுரம் ரோடு அரண்மனைபுதூர் அரசு பள்ளி அருகில் மின் கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் உள்ளது மின்சாரவாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை அகற்றி சரி செய்ய வேண்டும். மேலும் திருப்பூர் 50 வது வார்டு, கரட்டான்காடு தாராபுரம் மெயின்ரோடு பகுதியில் கேபிள் லைன் பதிக்க தோண்டப்பட்ட குழி 10 நாட்களாக மூடப்படாமல் இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதுடன் போக்குவரத்துக்கு இடையூராக இருக்கிறது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சரி செய்யவேண்டும்.ராஜேந்திரன், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 1:32 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51985

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பள்ளம்

சாலை

திருப்பூர் 28-வது வார்டு காலேஜ் ரோடு மரக்கடை பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வீணாகுவதால் பொதுமக்களுக்கு தண்ணீர் சீராக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் இங்கு ரோட்டின் இருபுறமும் உள்ள தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுவது வாடிக்கையாகி விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். சிவா, திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 1:31 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51984

குவியும் குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட பாரதிபுரம் 4 -வது வீதியில் அங்கனவாடி மையம் அருகில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைகளை முறையாக அகற்றாததால் சுகாதார சீர்கேடு எற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?ஆல்வின், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 1:24 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#51982

மக்களை அச்சுறுத்தும் நாய்கள்

மற்றவை

மக்களை அச்சுறுத்தம் நாய்கள்பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் வெறிநாய் ஒன்று கடந்த சில நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக பல்வேறு தெருநாள்கள், வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்களையும் விரட்டுகிறது. குறிப்பாக 5 பேரை வெறிநாய் கடித்ததால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். அதனால் அதிகாரிகள், நாய் தொல்லைக்கு முடிவு கட்டுவார்களா? மதன், பல்லடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 1:23 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51980

சாலையில் அபாய குழி

சாலை

திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஸ்வரா நகரில் சாலையின் மைய பகுதியில் பெரிய குழி விழுந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறும் நிலை உள்ளது. தற்போது அந்த குழியின் அருகே விபத்துகளை தடுக்க கம்பு வைக்கப்பட்டு உள்ளது. அதனாலும் அவ்வப்போது விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அபாய குழியை சீரமைக்க வேண்டும். இஸ்மாயில், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Dec 2024 1:22 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51979

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையிலிருந்து ஒற்றைக்கண் பாலத்திலிருந்து இரண்டாவது ரெயில்வே கேட் செல்லும் புதுராமகிருஷ்ணபுரம் சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகிக்கும் நேரத்தில் அதிக அளவில் குடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் கலந்து வருகிறது. குழாய் உடைப்பால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளதால் பக்தர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே குழாய் உடைப்பை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:09 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#51918

நொய்யல் வீதியில் சேதமான சாலை

சாலை

நொய்யல் வீதியில் சேதமான சாலை திருப்பூர் நொய்யல் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து குழாய் பதித்த இடத்தில் சரியான முறையில் மூடாததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் அந்த இடத்தில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Dec 2024 8:07 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#51916

தெருவிளக்குகள் ஒளிருமா?

மின்சாரம்

தெருவிளக்குகள் ஒளிருமா? திருப்பூர் 25-வது வார்டு அணைப்பாளையம் பகுதியில் தெருவிளக்கு எரியாததால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது பிரதான சாலையான மங்கலம் சாலை காலேஜ் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாகும். இங்கே நொய்யல் ஆற்றங்கரையை கடக்கும் பாலமும் அமைந்துள்ளது. எனவே தெருவிளக்குகளை சீரமைத்து ஒளிர செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? குமார், திருப்பூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick