Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 March 2025 10:50 AM GMT
Mr.V.Ramachandran
#54339

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சரவணம்பட்டி வி.ஐ.பி. சென்ட்ரல் டவுன் செல்லும் வழியில் சாலையோரத்தில் நீளவாக்கில் குழி ேதாண்டப்பட்டு உள்ளது. இந்த குழியில் கழிவுநீர் விடப்படுகிறது. நீண்ட நாட்களாக அங்கு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் ெகாசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 10:40 AM GMT
Mr.V.Ramachandran
#54338

வலுவிழந்த ராட்சத மரம்

மற்றவை

கோவையை அடுத்த வடவள்ளி அருகே பொம்மணம்பாளையம் செல்லும் சாலையோரத்தில் ராட்சத புளிய மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தின் அடிப்பகுதி கரையான்களால் அரிக்கப்பட்டு சிதைந்து வலுவிழந்த நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அந்த மரம் சாய்ந்து விழலாம். இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழும் முன்பாக அந்த மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 10:30 AM GMT
Mr.V.Ramachandran
#54337

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை சித்தாபுதூர் புதியவர் நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம், கூட்டமாக சாலைகளில் உலா வருகின்றன. மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி செல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். அத்துடன் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 March 2025 10:18 AM GMT
Mr.V.Ramachandran
#54336

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கந்தசாமி லே அவுட் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் அந்த சாலையை பயன்படுத்துவதை தவிர்க்கும் சூழல் உள்ளது. எனவே அந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:51 AM GMT
Mr.V.Ramachandran
#54172

குழாயில் உடைப்பு

தண்ணீர்

கோவையை அடுத்த கீரணத்தம் பகுதியில் உள்ள அத்திக்கடவு சாலையில் அதிக அளவில் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த சாலையில் பதிக்கப்பட்டு உள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. அதில் இருந்து வெளியேறும் குடிநீர் அருகில் உள்ள விளைநிலங்களில் தேங்கி பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே அங்கு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:50 AM GMT
Mr.V.Ramachandran
#54171

குண்டும், குழியுமான சாலை

சாலை

உக்கடத்தில் புதிய பாலம் முடியும் இடம் முதல் குறிச்சி குளம் பகுதிக்கு ஏறும் இடம் வரை சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:50 AM GMT
Mr.V.Ramachandran
#54170

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிபட்டணம் துரைராஜ் தெருவில் சீராக குடிநீர் வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அலைந்து திரியும் நிலையை காண முடிகிறது. அத்துடன் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலையும் உள்ளது. எனவே அங்கு சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:49 AM GMT
Mr.V.Ramachandran
#54169

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை ரெட்பீல்டு சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்பவர்களை துரத்தி செல்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சப்படுகிறார்கள். அதுவும், இரவு நேரத்தில் தெருநாய்களின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. மேலும் கூட்டம், கூட்டமாக சாலையில் நடமாடுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:24 AM GMT
Mr.V.Ramachandran
#54168

பழுதான சமுதாய கூட கட்டிடம்

மற்றவை

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் சமுதாய கூடம் உள்ளது. இதனை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சமுதாய கூட கட்டிடத்தின் மேல் தளத்தில் மகளிர் திட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. சுற்றுச்சுவரும் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. எனவே அந்த கட்டிடத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 March 2025 10:24 AM GMT
Mr.V.Ramachandran
#54167

தெருவிளக்கு வசதி வேண்டும்

மின்சாரம்

பந்தலூர் அருகே பிதிர்காடு சுங்கம் பகுதியில் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவசர தேவைக்கு கூட இரவில் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 10:16 AM GMT
Mr.V.Ramachandran
#53959

நடைபாதை புதுப்பிக்கப்படுமா?

சாலை

பந்தலூர் அருகே சின்ன ஒலிமடா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதை உடைந்து மேடு, பள்ளமாக கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அந்த நடைபாதையை புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 10:16 AM GMT
Mr.V.Ramachandran
#53958

தெருவிளக்கு வசதி இல்லை

மின்சாரம்

பந்தலூர் அருகே எடத்தால் பகுதியில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் அங்கு போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாவே வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick