Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
8 Sep 2024 7:09 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49592

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குழிக்கடவு சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கழிவுநீரை மிதித்த படி நடந்து செல்கின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சாலையோரம் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும். ராஜீ, குழிக்கடவு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:08 AM GMT
Mr.V.Ramachandran | பொள்ளாச்சி
#49591

குடிநீர் வினியோகம்

தண்ணீர்

ஆனைமலை தாலுகா கோட்டூர் டவுன் பஞ்சாயத்து 20-வது வார்டில் ஆழியாறு நகர், நெல்லித்துறை மன்னம் பகுதி மலைவாழ்மக்கள் குடியிருப்பில் புதிதாக அமைத்த குடிநீர் திட்டம் மூலம் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. அத்துடன் தரமற்ற குழாய்களை தரைக்கு மேலேயே பதித்ததால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுகிறது. எனவே, உடனடியாக குடிநீர் வினியோகிக்க வேண்டும். கனக்கன், ஆனைமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:07 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#49590

சாலையில் கால்நடைகள்

போக்குவரத்து

கோவை ஆர்.எஸ்.புரம் பூசாரிபாளையம் பகுதியில் உள்ள சாலைகளில் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வலம் வருகின்றன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில், பூசாரிபாளையம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:06 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49589

சாலையை சீரமைப்பது எப்போது?

சாலை

கோவை போத்தனூரில் இருந்து சுந்தராபுரம் செல்லும் சாலையில் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிகள் முடிந்து பல வாரங்கள் ஆன பின்னரும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். பாத்திமா, போத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:05 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49588

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ், சுங்கம் உள்ளிட்ட இடங்களில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பொதுமக்களையும் தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லதா, ஒலம்பஸ்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2024 7:03 AM GMT
Mr.V.Ramachandran | உதகமண்டலம்
#49587

பாலம் கட்டப்படுமா?

சாலை

பந்தலூர் அருகே சின்ன ஒளிமடாவில் சாலையின் குறுக்கே நீரோடை செல்கிறது. மழை பெய்யும் போது, நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு சாலையின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். ரஜினிகாந்த், சின்னஒளிமடா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 9:18 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49443

குளம் போல் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

கோவை மாநகராட்சி 99-வது வார்டு பகுதியில் நூலகம் ஒன்று உள்ளது. இங்கு செல்லும் வழியில் மழை பெய்தால் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் சேறும், சகதியுமாக சாலை மாறி விடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பலரும் வலுக்கி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். எனவே அங்கு மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். மனோகரன், கோணவாய்க்கால்பாளையம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 9:18 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49442

விபத்து அபாயம்

போக்குவரத்து

கோவை தடாகம் சாலையின் நடுவில் கோவில்மேடு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விபத்துகளை தடுக்க தடுப்பு கற்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதில் 2 கற்களை மட்டும் சாலையோரம் அகற்றி வைத்துவிட்டு, சாலையை கடக்க சிலர் வழி ஏற்படுத்தி வைத்து உள்ளனர். இதன் காரணமாக அந்த வழியாக சாலையை கடப்பவர்கள் வாகனத்தில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு மீண்டும் தடுப்பு கற்களை வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். சுதர்ஷன், கோவில்மேடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 9:17 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#49441

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

கோவை தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர் நகரில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் கடந்த சில நாட்களாக நிரம்பி வழிகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணன், தெலுங்குபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 9:16 AM GMT
Mr.V.Ramachandran | மேட்டுப்பாளையம்
#49440

பழுதடைந்த அரசு கட்டிடம்

மற்றவை

கோவையை அடுத்த சோமையம்பாளையம் அருகே கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. இதன் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆங்காங்கே விரிசல் அடைந்தும், உடைந்தும் உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழ வாய்ப்பு இருக்கிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். ராம்கி, கஸ்தூரிநாயக்கன்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 9:16 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49439

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

பந்தலூர் அருகே கல்லட்டி பகுதியில் உள்ள சாலையோரத்தில் வளைவான பகுதியில் ஆபத்தான பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாய சூழல் காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். அங்கு எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லை. மேலும் தடுப்புச்சுவரும் இல்லை. எனவே அங்கு தடுப்புச்சுவர் அமைப்பதோடு எச்சரிக்கை பலகையும் பொருத்த வேண்டும். இந்திரஜித், கல்லட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2024 9:15 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49438

ஆபத்தான மரங்கள்

மற்றவை

பந்தலூரில் இருந்து தேவாலா செல்லும் சாலையோரத்தில் பழமையான மரங்கள் நிற்கின்றன. இவை கனமழை மற்றும் சூறாவளி காற்றின்போது சரிந்து வாகனங்கள் மீது விழுந்து சேதங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளன. மேலும் அந்த வழியில் மின் கம்பங்களும், மின் வழித்தடங்களும் உள்ளன. இதனால் மரங்கள் சரிந்து விழும்போது மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பந்தலூர்-தேவாலா செல்லும் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick