Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
25 Aug 2024 12:05 PM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49301

கழிவுநீர் கால்வாய் வேண்டும்

கழிவுநீர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட உப்பட்டி அருகே மேஸ்திரிகுன்னு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் கழிவுநீர் நடைபாதையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 11:26 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#49298

பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி புதுப்பாளையம் ரெயில்வே பாலம் அருகில் உள்ள சாலை முழுவதும் பெயர்ந்து பள்ளம் விழுந்து உள்ளது. அந்த சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீராலும், பெயர்ந்து கிடக்கும் கற்களாலும் தவறி விழுந்து காயம் அடைந்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், அவர்களது பெற்ேறார், தினசரி வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 11:26 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#49297

சுகாதார சீர்கேடு

குப்பை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில்ஸ் அருகே டி.பி.எப். தெருவில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் குப்பை என்ற நிலை உருவாகி உள்ளது. அந்த அளவிற்கு சாலையோரத்தில் குப்பைகளாக காட்சி அளிக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதன் காரணமாக வெளியே செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், மீண்டும் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டாமல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 11:25 AM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#49296

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கோவை சுண்டக்காமுத்தூர் ராயப்பா நகரில் பாதாள சாக்கடை பணிக்காக கான்கிரீட் சாலை தோண்டப்பட்டது. அந்த பணி முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வந்து செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 11:25 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#49295

கடும் துர்நாற்றம்

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 76-வது வார்டுக்கு உட்பட்ட செல்வபுரம் பாரதி சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் கால்வாயை தூர்வாரி, அதில் இருந்த மண்ணை அகற்றி, அங்கேயே குவித்து வைத்தனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த மண்ணை அகற்றவில்ைல. அதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழை பெய்யும்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு மீண்டும் கால்வாயில் மண் சேர வாய்ப்பு உள்ளது. அத்துடன் போக்குவரத்துக்கும் இடையூறாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Aug 2024 11:24 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#49289

அதிகரிக்கும் விபத்துகள்

சாலை

கோவை அருகே பேரூர் அருகே சிறுவாணி மெயின்ரோடு பீட்பள்ளம் முதல் மாதம்பட்டி வரை சென்டர் மீடியன் இல்லை. மேலும் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அங்கு புறவழிச்சாலை பணிக்காக தூண் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அங்கு எந்தவொரு எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நெடுஞ்சாலைத்துறையினர்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 11:42 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#49129

உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படுமா?

தண்ணீர்

சிங்காநல்லூர் உழவர் சந்தை பின்புறம் உள்ள வீட்டு வசதி வாரிய ‘ஏ-விங்’ மூன்று முக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் குடிப்பதற்கு தவிர மற்ற தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் குடங்களுடன் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. எனவே உப்பு தண்ணீர் வினியோகம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 11:41 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#49128

குழாயில் உடைப்பு

தண்ணீர்

கோவை சவுரிபாளையம் பாரதிபுரத்தில் உப்பு தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. மேலும் அருகில் உள்ள சாக்கடையில் கலக்கிறது. அத்துடன் குழாய் உடைப்பை சரி செய்யாமல் அதன் மீது செங்கல்லை வைத்து மூட முயற்சித்து உள்ளனர். ஆனாலும் தண்ணீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. அங்கு ஏற்பட்டு உள்ள குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் சாக்கடையில் கலக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 11:41 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49126

கொசுக்கள் தொல்லை

மற்றவை

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் கூட்டுறவு வங்கி, உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. அங்கு செல்லும் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஆங்காங்கே மேல்மூடி இல்லாமல் திறந்து நிலையிலும், உடைந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் தவறி கால்வாயில் விழும் நிலை உள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் தொல்லை அதிகரிப்பதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்க்கு மேல் மூடி அமைப்பதோடு, கால்வாயை சீரமைக்கவும் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 11:40 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49124

குடிநீரில் குளோரின் அளவு அதிகரிப்பு

தண்ணீர்

கோவை மாநகராட்சி 71-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் சுப்பிரமணியம் ரோடு பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு அதிகமாக இருக்கிறது. இதனால் அந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க விலை கொடுத்து குடிநீரை வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே குளோரின் அளவை குறைத்து குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 11:58 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#48961

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவை ஒண்டிபுதூரில் இருந்து செல்லும் இருகூர் சாலையில் இட்டேரி வீதி, தாகூர் நகர், எஸ்.எம்.எஸ். லே அவுட், கோபால் நகர், கிருஷ்ணன் நாயுடு வீதி, ஜல்லிக்கட்டு வீதி, செந்தில் ஜனதா நகர் உள்ளிட்ட இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. பயன்படுத்த முடியாத அளவிற்கு படுமோசமாக உள்ள சாலைகளில்தான் அங்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக செந்தில் ஜனதா நகரில் தரமற்ற முறையில் சாலை சீரமைக்கப்படுகிறது. இதனால் விரைவில் பழுதடைந்து விடும். எனவே பொதுமக்களின் அவதி தீர சாலைகளை முறையாக சீரமைக்க ஆவண செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Aug 2024 11:58 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#48960

மதுப்பிரியர்கள் அட்டகாசம்

மற்றவை

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி புது பாலம் அருகே மதுப்பிரியர்கள் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கின்றனர். போதை தலைக்கேறியதும் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபடுகின்றனர். இது அந்த வழியாக செல்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. அத்துடன் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குறிப்பாக பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு மதுப்பிரியர்கள் அட்டகாசத்தை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick