Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Sep 2024 7:42 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49938

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலையில் நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். அனிதா, புலியகுளம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:41 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#49937

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோவை சரவணம்பட்டியில் ஜி.கே.எஸ். நகரில் இருந்து வி.ஐ.பி. சென்ட்ரல் டவுன் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அதுவும் மழை பெய்துவிட்டால் அந்த சாலை பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. இதனால் விபத்துகளும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மோகன், சரவணம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:41 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49936

கழிப்பிடம் கட்டப்படுமா?

கழிவுநீர்

தமிழக-கேரள எல்ைலயில் பந்தலூர் அருகே நம்பியார்குன்னு, மதுவந்தால் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு இருமாநில பொதுமக்களும் வந்து செல்கின்றனர். ஆனால் ஒரு கழிப்பிட வசதி கூட இல்லை. இதன் காரணமாக அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடம் இன்றி அவதிப்படும் நிலை உள்ளது. சிலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு கழிப்பிடம் கட்டி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். ராஜா, நம்பியார்குன்னு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:40 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49935

கால்வாய் வசதி வேண்டும்

கழிவுநீர்

கோவை மாநகராட்சி 92-வது வார்டு சுகுணாபுரம் அருகே அப்பர் செந்தமிழ் நகரில் உள்ள மதரசா லைன், பூண்டுக்காரர் லைன் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரும், மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் மழைநீரும் சாலைகளில் செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் காணப்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:39 AM GMT
Mr.V.Ramachandran | மேட்டுப்பாளையம்
#49934

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதை ஒட்டி குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அத்துடன் கால்வாயிலும் குப்பைகள் வீசப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே உடனடியாக குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். செந்தில்குமார், மேட்டுப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:38 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49933

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

பந்தலூர் தாலுகா சேரங்கோடு அருகே சிங்கோனா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. ஆனால் தெருவிளக்குகள் சரிவர ஒளிராமல் கிடக்கிறது. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எனவே தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:38 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49932

ஆபத்தான மின் பெட்டி

மின்சாரம்

கோவை மாநகராட்சி 40-வது வார்டு இளங்கோ நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்க்குள் மின்கம்பம் உள்ளது. அதில் தாழ்வான நிலையில் மின் பெட்டி பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த பெட்டியும் உடைந்து கிடக்கிறது. அங்கு அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் விளையாடி மகிழ்கிறார்கள். அவர்கள் எதிர்பாராதவிதமாக மின் பெட்டியை தொட்டால் கூட மின் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த மின்பெட்டியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தன், கோவை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2024 7:37 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49931

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

போக்குவரத்து

பந்தலூர் தாலுகா பொன்னானியில் இருந்து மாங்கம்வயல் செல்லும் சாலை பெயர்ந்து கிடக்கிறது. அந்த சாலையில் ஆங்காங்கே ஆபத்தான பள்ளங்கள் காணப்படுகின்றன. அந்த பள்ளங்களில் இறங்கி, ஏறும்போது வாகனங்கள் பழுதாகி விடுகின்றன. அத்துடன் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மழை பெய்துவிட்டால், அந்த சாலையில் தண்ணீர் தேங்குவதால், பள்ளங்கள் இருப்பதே தெரிவது இல்லை. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். சிவசுப்பிரமணியம், பொன்னானி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:04 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#49767

குண்டும், குழியுமான சாலை

சாலை

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைவயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதுவும் மழை பெய்துவிட்டால் சாலை பயன்படுத்த முடியாத அளவிற்கு சென்று விடுகிறது. மேலும் விபத்துகளும் அரங்கேறுகிறது. எனவே அந்த சாலைைய உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். பொன்மோகன்தாஸ், புஞ்சைவயல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:04 AM GMT
Mr.V.Ramachandran | சூலூர்
#49766

நீர்வழித்தடம் மீட்கப்படுமா?

தண்ணீர்

சூலூர் தாலுகா நடுப்பாளையம் அருகே வெங்கடேஸ்வரா நகரில் மழைநீர் செல்லும் வழித்தடம் உள்ளது. இந்த வழித்தடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர் ஓட்டம் தடைபட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதத்தை விளைவிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே நீர்வழித்தடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். மஞ்சு, நடுப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:03 AM GMT
Mr.V.Ramachandran | தொண்டாமுத்தூர்
#49765

சீராக குடிநீர் வினியோகிக்கப்படுமா?

தண்ணீர்

கோவை சிறுவாணி மெயின்ரோடு மாதம்பட்டி அருகே குப்பனூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீருக்காக காலி குடங்களுடன் பல இடங்களுக்கு அலைந்து திரியும் நிலை உள்ளது. மேலும் விலை கொடுத்து தனியாரிடம் இருந்து குடிநீர் வாங்கி பயன்படுத்த வேண்டி இருக்கிறது. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 8:02 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#49764

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலை

கோவை மாநகராட்சி 92-வது வார்டுக்கு உட்பட்ட அப்பர் செந்தமிழ் நகரில் விநாயகர் கோவில் எதிரே உள்ள சாலையின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த சாக்கடையை சரி செய்ய வசதியாக சாலையில் குழி அமைத்து மூடி போடப்பட்டு உள்ளது. இந்த மூடி அமைக்கப்பட்டு உள்ள பகுதியில் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. அதாவது அங்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த பள்ளத்தை சரி செய்து மூடியை சரி செய்ய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick