Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Oct 2024 11:36 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#50871

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

கோவை மாநகராட்சி 54-வது வார்டுக்கு உட்பட்ட நீலிகோணாம்பாளையம் தாமோதரசாமி லே அவுட் பகுதியில் சாலையின் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அதில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம். அந்த குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 11:36 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#50870

பொதுமக்கள் அச்சம்

மற்றவை

பந்தலூர் பஜாரில் கால்நடைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக உலா வருகின்றன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக நடந்து வருபவர்களை சில நேரங்களில் தாக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் விபத்து அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு கால்நடைகள் நடமாட்டத்தை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 11:35 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் தெற்கு
#50869

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனி, ரொட்டிகடை மைதானம் ரோடு, பயனிர் மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பகலிலும், இரவிலும் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 11:35 AM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#50868

கடும் துர்நாற்றம்

கழிவுநீர்

கோவை சிங்காநல்லூரை அடுத்த இருகூர் அருகே லட்சுமி கார்டன் உள்ளது. அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் தொடர் மழை காரணமாக அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து நிற்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு கால்வாய் அடைப்பை நீக்கி மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 11:34 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#50867

அடிப்படை வசதி வேண்டும்

தண்ணீர்

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட ரேஞ்ச்-1 பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு சரிவர குடிநீர் வசதி இல்லை. இதனால் குடிநீருக்காக அவர்கள் நீண்ட தூரம் அலைந்து திரியும் நிலை உள்ளது. அத்துடன் போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 10:51 AM GMT
Mr.V.Ramachandran | கூடலூர்
#50669

உடைந்த குடிநீர் குழாய்கள்

தண்ணீர்

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தப்பிளா பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பல இடங்களில் குழாய்கள் உடைந்து காணப்படுகின்றன. இதன் காரணமாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகிக்க முடிவது இல்லை. எனவே குழாய்களை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 10:51 AM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50668

ஒளிராத தெருவிளக்குகள்

மின்சாரம்

கோவை பாலசுந்தரம் சாைலயில் காவலர் பயிற்சி பள்ளி முதல் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வரை தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதன் காரணமாக இரவு நேரத்தில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்குள்ள சாலையும் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் குழி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 12:09 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50524

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது வார்டு சிம்சன் நகர் விரிவு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை கூட்டம், கூட்டமாக சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக உலா வருகின்றன. அத்துடன் அந்த வழியாக நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் ெதருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 12:08 PM GMT
Mr.V.Ramachandran | கவுண்டம்பாளையம்
#50523

சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையத்தில் இருந்து கணபதி செல்லும் சாலையில் ரெயில்வே பாலம் உள்ளது. இதன் கீழ் சுரங்கப்பாதை செல்கிறது. இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் குட்டை போல தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்லும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக வாகனங்கள் பழுதாவதோடு வாகன ஓட்டிகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 12:08 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50522

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை

கோவை கணபதி அருகே பூசாரிபாளையத்தில் இருந்து மணியகாரம்பாளையம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அப்படி கடந்து சென்றாலும் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது. இதனால் தேவையில்லாத வாக்குவாதங்களும், தகராறுகளும் ஏற்படுகிறது. மேலும் பிற வாகன ஓட்டிகளும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 12:07 PM GMT
Mr.V.Ramachandran | கோயம்புத்தூர் வடக்கு
#50521

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கோவை வடகோவை புரூக்பீல்டு சாலை பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம், அங்குள்ள மிகப்பெரிய ரவுண்டானாதான். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் சிறு சிறு விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட விரைவாக செல்ல முடியாத நிலை உருவாகி வருகிறது. எனவே இங்கு நிலவும் இந்த பிரச்சினைக்கு போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 12:07 PM GMT
Mr.V.Ramachandran | சிங்காநல்லூர்
#50520

கடும் துர்நாற்றம்

குப்பை

கோவை மாநகராட்சி 63-வது வார்டு சிங்காநல்லூர் அரவான் கோவில் பகுதியில் ரேஷன் கடை அருகே சாக்கடை கால்வாயில் இருந்து குப்பைகள் எடுத்து வெளியே போடப்பட்டு உள்ளது. அதை முறையாக அகற்றவில்ைல. தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ரேஷன் கடைக்கு வந்து செல்வோர் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick