Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Jun 2024 5:19 PM GMT
Mr.Nagarajan | அரூர்
#47238

விபத்து அபாயம்

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் சமீபகாலமாக கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தொழிலாளிகள் வாகனங்களில் விதிமுறைகளை மீறி அதிக நீளத்திற்கு கம்பிகளை எந்தவித பாதுகாப்பும் இன்றி எடுத்து செல்கின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் கம்பிகளில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே அவ்வாறு உரிய பாதுகாப்பு இன்றி கம்பிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:16 PM GMT
Mr.Nagarajan | பென்னாகரம்
#47237

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அவ்வை நகர் முதல் தெரு உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 20 அடி அகல சாலை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் குடியிருப்புவாசிகள் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால் தற்போது 10 அடி அளவிற்கு சாலை சுருங்கி விட்டது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுகுனா, அவ்வை நகர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#47235

சேதமடைந்த சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஆத்துமேட்டில் இருந்து அத்திமுட்லு -அகரம் செல்லும் சாலை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த பகுதி சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள், பள்ளி வாகனங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றன. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கதிர்வேல், அத்திமுட்லு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:12 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#47233

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 15-வது வார்டில் சஞ்சீவி செட்டி தெரு உள்ளது. இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இதே பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாராத காரணத்தினால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான சிமெண்டு சாலையை சீரமைத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தமிழ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:10 PM GMT
Mr.Nagarajan | ஓசூர்
#47230

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரத்தில் உழவர் சந்தை அருகே, பாகலூர் ரோடு ரவுண்டானா, பழைய பெங்களூரு சாலை உள்ளிட்ட இடங்கள் அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே சாலைகளின் நடுவே கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 5:09 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#47228

சாக்கடை கால்வாய்க்கு மூடி வேண்டும்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி தாலுகா பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆனந்த் நகரில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கால்வாயின் மீது சிமெண்டு மூடி போடவில்லை. இதனால் கால்வாயின் மறுபகுதியில் வசிப்பவர்கள் வாகனங்களில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:53 PM GMT
Mr.Nagarajan | எடப்பாடி
#47059

பாலம் அமைக்கப்படுமா?

மற்றவை

எடப்பாடி நகரின் தெற்கு எல்லை பகுதியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் மறுகரையில் நண்டுக்காரன் காடு, சரிபாறைக்க்காடு, செட்டிகாடு, மொரம்புக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மறுகரையில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏரிக்கரை வழியாக சென்று, எடப்பாடி நகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் பருவமழை மற்றும் கனமழை காலங்களில் பெரிய ஏரி நிரம்பி வழியும் சூழலில், மிகவும் ஆபத்தான முறையில் மாணவர்கள் ஏரி கரையை கடந்து பள்ளிக்கு சென்று வரும் அவல...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:52 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#47058

ஆபத்தான சாலை

சாலை

தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி கிழக்கு கரை கால்வாய் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இந்த பாலத்தின் வழியாக எடப்பாடியில் இருந்து குமாரபாளையம், ஈரோடு வரை தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் போடப்பட்ட தற்காலிக சாலையின் நடுவே தென்னை மரம் மற்றும் பிற மரங்கள் உள்ளதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் மரங்கள் இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை துறை...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#47051

சுகாதார கேடு

கழிவுநீர்

நாமக்கல் பஸ் நிலையம் அருகில் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். மேலும் தேங்கிய கழிவுநீர் வெளியே செல்ல இயலாத வகையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உழவர் சந்தையில் கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே உழவர் சந்தையில் கடை வைத்துள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:37 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#47050

ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

தண்ணீர்

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் அதிக அளவு ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் விஷ பாம்புகள் புகுந்து விடுகின்றன. மேலும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். -பீட்டர், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:35 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#47048

செல்போன் கோபுரம் பயன்பாட்டிற்கு வருமா?

மற்றவை

கொல்லிமலையில் உள்ள 14 ஊராட்சி பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் 6 மாதத்திற்கு மேலாகியும் பணிகள் முடிந்து இந்த கோபுரங்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் செல்போன்களை முழுமையாக உபயோகப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அந்த செல்போன் கோபுரங்களை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிகுமார், செம்மேடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:14 PM GMT
Mr.Nagarajan | பாப்பிரெட்டிப்பட்டி
#47037

அடிப்படை வசதிகள் தேவை

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு சமத்துவபுரம் கருங்கல்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இது மட்டுமல்லாமல் மின் விளக்கு வசதி இல்லை. எனவே கிராமத்திற்கு தேவையான மின்விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தர வேண்டும். -மேகவர்ணன், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick