Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 May 2024 5:12 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#47035

தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பஞ்சப்பள்ளி பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த சுகாதார வளாகத்துக்கு பயணிகள், பொதுமக்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் உடனடியாக தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -காமராஜ், பஞ்சப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:11 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#47034

ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

தண்ணீர்

பாப்பாரப்பட்டி நகரையொட்டி பாப்பாரப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்து வருகின்றன. இவை ஏரியில் தண்ணீர் தேங்கும் பரப்பை ஆக்கிரமித்து வருகின்றன. அண்மையில் இந்த பகுதியில் கோடை மழை பெய்த போதும் பாப்பாரப்பட்டி ஏரியில் குறிப்பிடத்தக்க அளவில் மழைநீர் தேங்கவில்லை. எனவே இந்த ஏரிக்கு மழைநீர் சீராக வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த ஏரியில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். -முருகேசன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#47032

சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்

சாலை

தர்மபுரி நகரின் மையப் பகுதியில் சுந்தரம் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் உள்ள சாலையில் வணிக வளாகங்கள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையின் இருபுறங்களிலும் பெரும் பகுதியை ஆக்கிரமித்தபடி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், முறைப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமசாமி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:05 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#47031

எரியாத உயர்கோபுர மின்விளக்குகள்

மின்சாரம்

எரியாத உயர்கோபுர மின்விளக்குகள் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே 5 சாலைகள் சந்திக்க கூடிய ரோடு உள்ளது. பெங்களூரு, சேலம், சென்னை சாலைகள், சப்-ஜெயில் சாலை, காந்தி சாலை என முக்கிய சாலைகள் சந்திக்க கூடிய இந்த பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் பெரும்பாலான நாட்கள் இரவில் எரிவதில்லை. இதனால் நகரின் முக்கிய பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:03 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#47030

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள தென்றல் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தாமதமின்றி தார்சாலை அமைத்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 5:02 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#47028

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சரி செய்யப்படுமா?

தண்ணீர்

பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சி ஜிஞ்சம்பட்டி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 மாத காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளான நீசானூர், சேகினாம்பட்டி, கொல்ல சேக்கினாம்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்து தர வேண்டும். -பீட்டர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#46857

நோய் தொற்றும் அபாயம்

கழிவுநீர்

எருமப்பட்டி தாலுகா ஜம்புமடை கிராமத்தில் சாலையில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தூய்மை பணியாளர்களிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. தேங்கி நிற்கும் கழிவுநீரில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களும் உற்பத்தியாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சதீஷ், ஜம்புமடை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#46856

சுத்தமான குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

பள்ளிபாளையம் டி.வி.எஸ். மேடு மற்றும் மாதபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குழாய்களில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த குடிநீர் கலங்கலாக வருகிறது. மேலும் சில சமயங்களில் அந்த குடிநீரில் புழுக்களும் வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தினால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா? -செல்வம், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#46855

பழுதடைந்த மின்விளக்கு

மின்சாரம்

ராசிபுரம் தாலுகா களரம்பட்டி கிராமத்தில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் வருவோரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பழுதடைந்த இந்த மின்விளக்கை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். -ரவி, ராசிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:18 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#46853

‘தினத்தந்தி'க்கு நன்றி

ட்ரெண்டிங்

மோகனூர் தாலுகா வளையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைந்ததால் சரி செய்ய குழி தோண்டப்பட்டது. ஆனால் குழி மீண்டும் மூடப்படவில்லை. இதனால் மழைநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளதாக ‘தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அந்த குடிநீர் குழாயை சரி செய்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட உதவிய ‘தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். -பிரபாகரன் குரும்பப்பட்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#46852

பள்ளி திறக்கும் முன்பு நடவடிக்கை?

தண்ணீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மாட்டுக்காரனுர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சுமார் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் இரண்டு ஆழ்துளை குழாய்கள் உள்ளன. இந்த இரண்டு குழாய்களும் பழுதாகி கடந்த 5 மாதங்களாக தண்ணீர் வருவதில்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி திறப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த ஆழ்துளை குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பழனிவேல்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 4:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#46851

சேதமடைந்த குடிநீர் குழாய்

தண்ணீர்

சேலம் ஏ.டி.சி. நகரில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்ப்படுகிறது. தற்போது இந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கருப்பன், ஏ.டி.சி.நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick