Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
19 Nov 2023 4:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#42241

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 5-வது வார்டில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஜிலானி பாஷா, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:42 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#42239

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி வாகனங்கள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையை கடந்து செல்ல கடும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Nov 2023 4:40 PM GMT
Mr.Nagarajan | பாலக்கோடு
#42238

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அண்ணாமலைஅள்ளி ஊராட்சி புதூர் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே உடைந்த இந்த குடிநீர் குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -வெங்கடேசன், அண்ணாமலைஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 3:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#42033

மின் விளக்கு சரி செய்யப்படுமா?

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலக பூங்கா வளாகத்தில் உள்ள மின் விளக்கு பழுதாகி நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் சமூக விரோதிகள் அப்பகுதியில் மது அருந்தி வருகின்றனர். மேலும் திருட்டு அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் மின் விளக்கு சரிசெய்ய வேண்டும். -கோவிந்தராஜ், பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 3:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#42032

பள்ளியில் தேங்கி நிற்கும் மழைநீர்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அகரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் தாழ்வான பகுதியாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வான பகுதியை சமம் செய்து மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா அக்ரம், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 3:14 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#42031

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர்- பாகலூர் சாலையில் என்.ஜி.ஓ. காலனி அருகே, பிரதான சாலையிலிருந்து ரமண ஸ்ரீ நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் சாலையின் முன்புறம் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைத்து, கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அன்சர், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 12:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41991

விபத்து அபாயம்

சாலை

நாமக்கல் கொல்லிமலை அடிவாரத்தில் காரவள்ளி சாலையின் ஓரத்தில் உடைந்த 2 மின்கம்பங்கள் போடப்பட்டுள்ளது. அந்த கம்பத்தின் மேல் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது. எனவே இந்த கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? -நாராயணன், காரவள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 12:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#41990

பயணிகள் நிழற்கூடம் அமைக்கலாமே!

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே பஸ் நிறுத்தத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர். ஆனால் போதிய நிழல் இல்லாமல் அவர்கள் வெயிலில் நிற்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வம், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 12:22 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#41989

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி- தம்மம்பட்டி சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் ேநாய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -அண்ணாதுரை, வாழப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Nov 2023 12:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#41988

சாலை அமைக்கப்படுமா?

சாலை

சேலம் ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பட்டி ஊராட்சி 3-வது வார்டில் கோபால் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலை சேதமடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -சங்கர், ஆண்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 3:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#41839

ஆபத்தான மரம்

மற்றவை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி தொளசம்பட்டி பிரிவு ரோடு அருகில் சாலையின் இருபுறமும் புளியமரங்கள் காய்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இந்த மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயராமன், தாரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Oct 2023 3:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#41838

சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர்

மற்றவை

சேலம் மாவட்டம் வாழப்பாடி தபால் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து உள்ளது. இதனால் மழை காலங்களில் இந்த சுற்றுச்சுவர் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த இந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுரேஷ், வாழப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick