Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Sep 2024 5:59 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#49899

தெருநாய் தொல்லை

மற்றவை

நாமகிரிப்பேட்டை திம்மநாயக்கன்பட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல பயப்படுகிறார்கள். வாகனங்களில் செல்வோரை தெருநாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர்கள், பெரியவர்கள் என 10-க்கும் மேற்பட்டோரை கடித்து விட்டன. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், திம்மநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:57 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#49898

பல்லாங்குழி சாலை

சாலை

எருமப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள நாமக்கல்-துறையூர் சாலையில் அய்யர்மேடு பகுதியில் ஆபத்தான முறையில் குழிகள் உள்ளன. இதில் அடிக்கடி சாலையில் செல்பவர்கள் கீழே விழுந்து விடுகின்றனர். இது போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் வாகனங்களில் செல்பவர்களுக்கு குழி இருப்பது தெரியவில்லை. இதனால் அடிக்கடி சாலை விபத்துகளும் நடக்கிறது. எனவே பல்லாங்குழி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜ்குமார், எருமப்பட்டி

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:51 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49897

நடைபாதையை ஆக்கிரமித்த வாகனங்கள்

சாலை

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடை மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்துவதற்கான இந்த நடைபாதையை ஆக்கிரமித்து வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பஸ்களுக்கு காத்திருக்கும் போது நிற்பதற்குகூட இடம் இல்லாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நடைபாதையில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகேசன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:50 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49896

சேதமடைந்த சாலை

சாலை

தர்மபுரி அருகே ஏலகிரி பகுதியில் அனுமன் கோவில் அருகே உள்ள தார்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் சென்று வருபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார், நல்லம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:48 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49894

திறந்தவெளியில் கிணறு

மற்றவை

ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சூரில் பஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ளது கிணறு. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இந்த கிணறு, தற்போது பாழடைந்து உள்ளது. திறந்தவெளியில் தரைமட்ட அளவிலேயே இருப்பதால் குப்பைகள் கொட்டும் கிணறாக மாறி உள்ளது. இதனால் கிணற்று நீர் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள கிணற்றுக்கு பாதுகாப்பு கம்பி வளையம் அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:47 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49893

சாலையோரம் வீசப்பட்ட குப்பை தொட்டிகள்

குப்பை

ஏரியூர் நகர் பகுதியில் குப்பைத்தொட்டிகளை பயன்படுத்தி குப்பைகளை சேகரிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கடைவீதி மற்றும் நகர் பகுதியில் குப்பை தொட்டிகளை வைக்காமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சாலை ஓரம் குப்பை தொட்டிகளை வீசி உள்ளனர். இதனால் குப்பை தொட்டிகள், துருப்பிடித்து, வீணாகும் நிலையில் உள்ளது. எனவே சாலையோரம் வீசப்பட்ட குப்பை தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். -கார்த்திகேயன், பட்டக்காரன் கொட்டாய்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:45 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#49892

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை தும்பிபாடி ஊராட்சிக்குட்பட்ட சந்தை தடம் பஸ் நிறுத்தம் அருகில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெளியே வர முடியாமல் அவதிப்படுகிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த எரியாத மின் விளக்கை சரிெசய்ய வேண்டும். -சிவா, சந்தை தடம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:44 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#49891

சாலை அமைக்க வேண்டும்

சாலை

பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சியில் 3-வது வார்டு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகில் கடந்த 2021-ம் ஆண்டு சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது இந்த சாலை நடந்து செல்லக்கூட இயலாத நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும். -கணேசன், மல்லப்பாடி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:42 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49890

ஆபத்தான மரம் அகற்றப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை நேதாஜி ரோட்டில் பசுல்லா நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு பழமையான புளிய மரம் ஒன்று அந்த பகுதியில் உள்ள கடை மீது சாய்ந்தபடி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மரும் உள்ளது. இதனால் வேகமாக காற்று அடித்தால் கூட அந்த மரம் விழும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க சாய்ந்த நிலையில் உள்ள அந்த மரத்தை அகற்ற வேண்டும். ஷாஜகான், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:41 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49889

லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

கிருஷ்ணகிரி நகருக்கு அருகாமையில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான லாரிகள் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன. அதேபோல் பெங்களூரு மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான லாரிகள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த நிலையில் சுங்கச்சாவடி அருகில் ஏராளமான லாரிகள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:39 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#49888

தேங்கி கிடக்கும் குப்பை

குப்பை

சூளகிரி-கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலை ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றிட வேண்டும். மேலும் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? -முனிராஜ், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Sep 2024 5:38 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#49887

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

பர்கூர் காரகுப்பம் ரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் இருந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் வரை கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையான பராமரிப்பும், தூர்வாரப்படாமலும் உள்ளது. இதனால் கழிவுநீர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். -வேலன், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick