Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Jan 2025 1:46 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52769

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாநகராட்சியை ஒட்டி உள்ளது வகுரம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாருதிநகர், பொன்விழாநகர் பகுதிகளில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துகின்றன. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வோர் அச்சத்தில் பயணிக்க வேண்டி உள்ளது. இதேபோல் சிறுவர், சிறுமிகளையும் அடிக்கடி தெருநாய்கள் துரத்துகின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த ஊராட்சி நிரவாகம் உரிய...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:45 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52768

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல்-திருச்சி சாலையில் பொன்விழா நகர் வளைவு வாயில் உள்ளது. இப்பகுதியில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இப்பகுதியில் தான் மாருதிநகர் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. எனவே பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சிறு, சிறு விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தர்மன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:42 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#52766

முட்புதர்கள் சுத்தம் செய்யப்படுமா?

மற்றவை

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் பகுதியில் முட்புதர்கள் அதிக அளவு காணப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள், விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சமடைகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் முட்புதர்களை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. -குமார், அத்தனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:41 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#52764

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் அருகே செண்பகமாதேவி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தில் நடுபகுதி விரிசல் விட்டு எப்போது வேண்டுமானாலும் விழ வாய்ப்புள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். -அசோகரத்தினம், மல்லசமுத்திரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:39 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#52763

மின்விளக்குகளை சாலையோரம் அமைக்கலாமே!

மின்சாரம்

கொல்லிமலைக்கு செல்லும் வழியில் முதல் கிராமமாக சோளக்காடு உள்ளது. இந்த சோளக்காடு பஸ் நிறுத்தத்தில் இருந்து கொல்லிமலையின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் மலையில் உயரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்வோருக்கு இரவு நேரத்தில் வெளிச்சம் கிடைக்காமல் இருந்து வருகிறது. மேலும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மின்கம்பத்தை சாலையோரம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும். -விஜய்செல்வம்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:38 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#52762

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் 4 ரோடு பாலத்தின் கீழ் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை ேசதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது பிரதான சாலை என்பதால் தினந்தோறும் விபத்துகள் நடந்த வண்ணமே உள்ளது. மேலும் 4 ரோடும் சந்திக்கும் பகுதியில் சாலையோரம் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் சறுக்கி விழுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க முன் வர வேண்டும். -குமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:37 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#52760

தார்சாலை வேண்டும்

சாலை

இரும்பாலை அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து பூமிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணல் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையில் மணல் கரைந்து சென்று விட்டது. எனவே நிரந்தர தீர்வாக இந்த பகுதியில் தார்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஆனந்தன், இரும்பாலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:36 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#52759

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சேலம் மேயர் நகர் 7-வது தெருவில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இந்த பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் செல்ல முடியாத சூழல் உருவாகி வருகிறது. எனவே பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். -குமரன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:35 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#52758

சேதமடைந்த சுகாதார வளாகம்

மற்றவை

தாரமங்கலம் பாப்பம்பாடி கிராமத்திற்கு உட்பட்ட சின்னப்பம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் சுகாதார வளாகத்திற்கு செல்ல முடியாத வகையில் குப்பைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டு உள்ளது. எனவே சேதமடைந்துள்ள சுகாதார வளாகத்தை சரி செய்யவும், குப்பை குவியலை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. -சுரேஷ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:34 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#52756

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் வழியில் அம்மன் கோவில்பட்டி பஸ் நிறுத்தம், செட்டிப்பட்டி பிரிவு பஸ் நிறுத்தம் உள்ளன. இந்த பஸ் நிறுத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் புதிதாக சிறுபாலம் கட்டப்பட்டது. ஆனால் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லை. இதன் காரணமாக தடுப்புச்சுவர் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. எனவே இந்த பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும். ேமலும் ஒளிரும் பட்டைகள் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்ைகயாக உள்ளது. ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:25 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#52753

தேங்கி கிடக்கும் குப்பைகள்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கிருஷ்ணகிரி செல்லும் சர்வீஸ் சாலையிலும், பஸ் நிலையம் அருகிலும் குப்பைகள் நீண்ட காலமாக தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக நீண்ட நாட்களாக அந்த பகுதியில் குப்பைகள் கிடப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சர்வீஸ் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சீனிவாசன், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Jan 2025 1:24 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#52751

இருசக்கர வாகனங்களால் இடையூறு

போக்குவரத்து

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் பயணிகளை இறக்கி செல்வதற்காக வழி உள்ளது. இந்த பகுதியில் சாலையில் இருபுறமும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்கள் செல்ல முடிவதில்லை. அந்த இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த கூடாது என காவல் துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைத்த போதிலும், அதே பகுதியில் தொடர்ந்து நிறுத்தப்படுகின்றன. எனவே டவுன் பஸ்கள் செல்லும் சாலையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick