Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 July 2025 5:45 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#57700

அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை உள்ளது. இங்கிருந்து 2-ம் எண் டவுன் பஸ் கம்பைநல்லூர், ஒடசல்பட்டி கூட்ரோடு, கடத்தூர், தாளநத்தம், பில்பருத்தி, பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி வரை சென்று வந்தது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொம்மிடிக்கு சென்று வந்தனர். இந்த பஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை, மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் என...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:42 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#57688

அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

போக்குவரத்து

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாத அளவிற்கு நுழைவுவாயிலில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தாலுகா அலுவலக நுழைவுவாயில் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதை அதிகாரிகள் கண்டு கொள்வார்களா? -குமார், பாப்பிரெட்டிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:40 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57687

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி நகரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சர்வீஸ் ரோடு பகுதிகளில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைநகராக உள்ள கிருஷ்ணகிரியில் துப்புரவு பணி சீராக செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் சுகாதார சீர்கேட்டால் அந்த பகுதியில் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாதன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:38 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#57686

தெருக்களில் சுற்றித்திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்

மற்றவை

பர்கூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்கள் சுற்றித்திரிகிறார்கள். இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பர்கூரில் இவர்கள் முக்கிய தெருக்களில் சுற்றித்திரிகிறார்கள். இவர்களுக்கு அவ்வப்போது பொதுமக்கள் உணவு வழங்குகிறார்கள். மேலும் அவர்கள் சாலையோரங்களில் படுத்து தூங்குகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள். எனவே இவர்களை மாவட்ட மனநல மருத்துவமனையில் சேர்த்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:36 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57685

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி நகரில் சாலை விரிவாக்க பணிகளும், வடிகால் கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் 5 ரோடு முதல் காந்தி சிலைக்கு செல்லும் காந்தி ரோட்டில் ஒரு பகுதி முழுவதும் குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பணிகள் மிகவும் மந்த நிலையில் நடைபெறுவதால் அந்த சாலையில் பஸ் போக்குவரத்து ஒரு வழிப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரிய வாகனங்களும் அந்த சாலையில் செல்ல முடிவதில்லை. குடியிருப்புவாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:35 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57684

இரவு நேர பஸ் சேவை கிடைக்குமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூரை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து தினமும் பணி நிமித்தமாக பலரும் கிருஷ்ணகிரி, ஓசூருக்கு வருகிறார்கள். அவர்கள் வேலை முடிந்து இரவில் வீட்டிற்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக பர்கூர், குருபரப்பள்ளி உள்பட பகுதிகளில் இரவு நேரங்களில் பஸ்களை நிறுத்துவதில்லை. எனவே இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது சாதாரண பஸ்களை இயக்கிட வேண்டும். அதே போல பயணிகள் இறங்க கூடிய பஸ் நிறுத்தங்களில் இறக்கி செல்ல...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:42 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57549

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

சேலம் சொர்ணபுரி கலைமகள் தெருவில் அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இந்தநிலை கடந்த சில மாதங்களாக உள்ளது. இதனால் அப்பகுதி பாசி படர்ந்து இருப்பதால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அதில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பாதாள சாக்கடையில் ஏற்பட்டு உள்ள அடைப்பை சரி செய்தால் சாலையில் கழிவுநீர் ஓடுவதை தவிர்க்கலாம். -அப்துல்லா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:42 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#57547

மாணவர்கள் ஆபத்தான பயணம்

போக்குவரத்து

தொளசம்பட்டியில் இருந்து ஓமலூர் வரை 98ஏ என்ற எண் கொண்ட அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இந்த பஸ்சின் கடைசி படிக்கட்டு பழுது ஏற்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு கதவு வசதியும் இல்லை. இதனால் கூட்ட நெரிசலில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த டவுன் பஸ்சின் படிக்கட்டை சீரமைத்து பாதுகாப்பு கதவு வசதி ஏற்படுத்தப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர். -பொதுமக்கள், தொளசம்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:40 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#57545

திறந்த வெளியில் கால்வாய்

மற்றவை

தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் பகுதியையொட்டி ராஜவாய்க்கால் சாக்கடைகால்வாய் திறந்த வெளியில் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் அந்த சாக்கடைகால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதி சாக்கடைகால்வாயையொட்டி இரும்பு கம்பி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். -குமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:39 PM GMT
Mr.Mohan | ஏற்காடு
#57544

குப்பைத்தொட்டிகள் அவசியம்

குப்பை

சேலம் கோரிமேட்டில் இருந்து குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா செல்லும் வழியில் சாலையோரம் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் இரண்டு குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த குப்பைத்தொட்டிகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே புதிதாக இரண்டு குப்பைத்தொட்டிகள் அமைத்து, சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளவரசன், சேலம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:38 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57542

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தண்ணீர்

சேலம் 4 ரோடு பெரமனூா் வீட்டு வசதி வாரியத்தில் மின் கம்பம் உள்ளது. இதன் அருகே ஆழ்துளை குடிநீர் தொட்டி மின்மோட்டார் இணைப்புடன் இருந்தது. இந்தநிலையில் மழையால் அந்த மின்கம்பம் சாய்ந்்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை நட்டனர். ஆனால் அந்த கம்பத்திற்கு மின்இணைப்பு வழங்காமலும், ஆழ்துளை குடிநீர் குழாயில் தண்ணீர் வராமலும் இருந்தது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்திற்கு மின் இணைப்பு கொடுத்து, புதிய குடிநீர் தொட்டி அமைத்தனர். இதனால் செய்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 July 2025 7:36 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57541

குண்டும், குழியுமான சாலை

சாலை

திருச்செங்கோடு அருகே கோ.எளையாம்பாளைம் மாரியம்மன் கோவில் அருகே சுடுகாடு முதல் துண்டுகாட்டூர் வரை உள்ள சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் எலச்சிபாளையம், கொன்னையார், மோர்பாளையம், பருத்திப்பள்ளி போன்ற ஊர்களுக்கு பள்ளி வாகனங்கள் செல்வதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவசர தேவைக்குகூட பயன்படுத்த முடியாதபடி உள்ள சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -மதி,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick