Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
20 July 2025 4:28 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#57841

புதிய குப்பை தொட்டி வைக்கலாமே!

குப்பை

மத்தூரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள ராச வீதி பகுதியில் பல வாரங்களாக குப்பைகள் வாருவதில்லை. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பை தொட்டியும் பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள குப்பைகளை வாரி தூய்மைப்படுத்தி குப்பை தொட்டியும் புதிதாக வைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. -சலீம், மத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 6:02 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57718

விபத்து அபாயம்

சாலை

சேலம் அண்ணா பூங்காவில் இருந்து குழந்தை இயேசு பேராலயம் வரை அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. குறிப்பாக மேம்பாலம் இறங்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு நெரிசல் ஏற்படுவது தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளங்கோவன், சேலம்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 6:01 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#57717

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளன. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் நடந்து செல்பவர்களையும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. எனவே இந்த பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜ், ஜலகண்டாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:59 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#57716

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. மழைகாலங்களில் வாகனங்கள் அந்த வழியாக செல்வதால் சாலை மிகவும் சேதமடைகிறது. மேலும் மழை தண்ணீர் பள்ளத்தில் தேங்குவதாலும், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே பெரிய விபத்து ஏற்படும் முன்பு மின்விளக்குகள், தரமான சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முருகன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:58 PM GMT
Mr.Mohan | எடப்பாடி
#57715

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

கொங்கணாபுரத்தில் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் சின்னப்பம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தையொட்டி உள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூசவில்லை. இதனால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் வேகமாக வரும் போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இந்த வேகத்தடைக்கு வர்ணம் பூசி, ஒளிரும் பட்டைகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிபைரவன், கொங்கணாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:57 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#57714

சுகாதார கேடு

குப்பை

தாரமங்கலம் ஒன்றியம் குருக்குப்பட்டி கிராமத்தில் உள்ளது பவளத்தானூர் ஏரி. இந்த ஏரியையொட்டி உள்ள பிரதான சாலையில் மருத்துவ மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. தெருநாய்கள் உணவை தேடி குப்பைகளை கிளறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த ஏரியையொட்டி கொட்டப்படும் குப்பைகளை அகற்ற அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். -அரசன், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:53 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57713

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

நாமக்கல் மாநகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்த அனைத்து வார்டுகளிலும் பொது பிரச்சினையாக தெருநாய் தொல்லை இருந்து வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால், சிலர் விபத்தில் சிக்குகிறார்கள்.இதேபோல் காலையிலும் தெருக்கள் வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் துரத்தி கடிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சேந்தமங்கலம் சாலையில் இறைச்சி மற்றும் மீன்கடைகள் அதிக அளவில் இருப்பதால் இங்கு சுற்றித்திரியும் தெருநாய்கள் ரெயில் நிலையத்திற்கு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:52 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57712

சேதமான சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் - திருச்சி சாலையில் பொன்விழா நகர் அமைந்து உள்ளது. இந்த பகுதிக்கு செல்ல பிரதான சாலையில் அலங்கார வளைவு இருக்கிறது. இந்த வளைவில் இருந்து பொன்விழா நகருக்கு ஏராளமானோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றும் உள்ளது. இந்த பள்ளிக்கும் இந்த சாலை வழியாக ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர்.இந்த பகுதிக்கு செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அடிக்கடி சிறு, சிறு விபத்துக்கள்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:51 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#57710

காட்சி பொருளான தண்ணீர் தொட்டி

தண்ணீர்

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் இருந்து நாமக்கல் வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் அருகே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஆண்டுகளாக அந்த தண்ணீர் தொட்டியில் சம்பந்தப்பட்டவர்கள் தண்ணீர் நிரப்பி வைப்பதில்லை. இதனால் பயணிகள், பாதசாரிகள் தண்ணீர் இன்றி சிரமம் அடைகின்றனர். எனவே காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. -ராஜேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:50 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#57706

குண்டும், குழியுமான சாலை

சாலை

கோ.எளையாம்பாளையம் மந்தகாடு முதல் மாரப்பம்பாளையம் பிரிவு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமைடந்த சாலையை சரி செய்து தர அதிகாரிகள் முன் வர வேண்டும், -மதியழகன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:49 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#57705

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலைக்கு செல்லும் பிரதான சாலையில் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் போக்குவரத்து இடையூறில் சிக்கி தவித்து வருகின்றன. எனவே அந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயபால், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2025 5:47 PM GMT
Mr.Mohan | அரூர்
#57704

தெருநாய்கள் தொல்லையால் விபத்துகள்

மற்றவை

ஏரியூர் அருகே உள்ள சின்னம்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பென்னாகரம் மேச்சேரி பிரதான சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் தெருநாய்கள் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. தெருநாய்கள் தொல்லையால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் -அழகி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick