Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
24 Nov 2024 8:04 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#51737

சாலையில் பள்ளம்

சாலை

திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அருகே சிங்கணாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு செல்லும் சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாரதிராஜா, அம்பலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 8:02 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#51736

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் குப்பைகளை முறையாக அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், திம்மாம்பேட்டை பாலத்தின் அருகிலும் குப்பைகளை குவித்து வைத்து உள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை முறையாக அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கராஜ், புத்துக்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 7:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51735

கால்வாய் மூடி சீரமைக்கப்படுமா?

கால்வாய் மூடி சீரமைக்கப்படுமா?கழிவுநீர்

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து செல்லும் பெங்களூரு பைபாஸ் சாலை ஓரம் சர்வீஸ் சாலையில், கால்வாய் மூடி உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே கால்வாய் மூடியை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா? -ரவிச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 7:55 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51734

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்

போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்மற்றவை

வேலூர் நகரில் மாடுகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் சி.எம்.சி. சிக்னல் பகுதியில் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் நிற்கின்றன. அந்த மாடுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரித்தீஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 7:53 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#51733

தினத்தந்திக்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிசாலை

அணைக்கட்டு தாலுகா அகரம் அருகே தோளப்பள்ளி பகுதியில் பள்ளிகொண்டா, குடியாத்தம் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருந்ததை தினத்தந்தி செய்தி எதிரொலியாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சீரமைத்தனர். இதற்காக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும், அதற்கு காரணமாக இருந்த தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். -ராஜா, தோளப்பள்ளி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 7:39 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#51730

புதிய மீன்மார்க்கெட் மேற்கூரை சேதம்

புதிய மீன்மார்க்கெட் மேற்கூரை சேதம்மற்றவை

வேலூர் புதிய மீன் மார்க்கெட் மேற்கூரை சேதம் ஏற்பட்டு ஆங்காங்கே உடைந்துள்ளது. மழைக்காலங்களில் உடைந்த மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே விழுகிறது. இதனால் மீன் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். உடைந்து கிடக்கும் மேற்கூரையை சரி செய்ய கடைக்காரர்கள் எந்த ஒரு ஏற்பாடும் செய்யவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -இம்ரான், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 7:34 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51729

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்

சாலையோரம் வீசப்படும் குப்பைகள்குப்பை

ஆரணியை அடுத்த சேவூரில் இருந்து-முள்ளிப்பட்டு பைபாஸ் சாலை பகுதியில் சேவூர் ஊராட்சி சார்பில் கிராமங்களில் வீடு வீடாகச் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து பைபாஸ் சாலையோரம் வீசுகிறார்கள். காற்று அடித்தால் குப்பைகள் சாலை முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது, துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? -புலவேந்திரன், சேவூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 7:27 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51728

பயன்பாடற்ற சுகாதார வளாகம்

பயன்பாடற்ற சுகாதார வளாகம்மற்றவை

ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இது, மக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதை, உடனடியாக ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் தலையிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கோண்டுவர வேண்டும். -பாரதிதாசன், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 7:25 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#51727

குடிநீர் தொட்டியை சுற்றி தேங்கும் நீர்

குடிநீர் தொட்டியை சுற்றி தேங்கும் நீர்தண்ணீர்

ஆரணி ஊராட்சிக்கு உட்பட்ட மொழுகம்பூண்டி கிராமத்தில் வண்டிமேட்டு தெருவில் சிறு மின் விசை குடிநீர் தொட்டி உள்ளது. அதைச் சுற்றிலும் பாசி படிந்து, துர்நாற்றம் வீசுகிறது. அங்கு எப்போதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரத்தன்சிங், மொழுகம்பூண்டி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Nov 2024 7:23 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#51726

மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படுமா?

மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படுமா?மின்சாரம்

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்பாலானந்தல் அருகே ஊரக சாலை ஓரம் விவசாய நிலங்களில் 2 மின் கம்பங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மின் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்களை அமைப்பார்களா? -ராஜா, மங்கலம்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 8:22 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#51551

வாலாஜாவுக்குள் வராத ஆரணி பஸ்கள்

போக்குவரத்து

ஆரணி-சென்னை, சென்னை-ஆரணி செல்லும் அரசு பஸ்கள் வாலாஜா நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றாமல் பைபாஸ் சாலையிலேயே சென்று விடுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பயணிகள், தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆரணி பகுதியில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் வாலாஜா நகருக்குள் வந்து செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெ.தேவன், ஓச்சேரி.

மேலும்
ஆதரவு: 58
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Nov 2024 8:18 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#51550

மேம்பாலம் பணியை விரைந்து முடிப்பார்களா?

சாலை

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெருமுகை மேம்பாலத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட்டார்கள். ஆனால், நோயாளிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பூட்டுத்தாக்கு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பெருமுகை மேம்பாலத்தைபோல் பூட்டுத்தாக்கு மேம்பாலத்தையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விடுவார்களா? -ஹரிசுதா, பூட்டுத்தாக்கு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick