Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2025 5:13 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#59329

கிராம சேவை மைய கட்டிடம் திறக்கப்படுமா?

மற்றவை

தண்டராம்பட்டு அருகே சே.கூடலூர் கிராமத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கிராம சேவை மைய கட்டிடம் உள்ளது. அது, கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. அது பூட்டியே உள்ளது. இன்னும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -குரு, சே.கூடலூர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:34 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#59183

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?மற்றவை

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளன. ஆனால் பக்தர்களும், பொதுமக்களும் பயன்படுத்தாமல் உள்ளனர். அது, தற்போது பராமரிப்பின்றி உள்ளது. அங்கு தண்ணீர் வசதி இல்லை. சுகாதார வளாகத்தை சுற்றிலும் புதர் வளர்ந்துள்ளது. கோவில் நிர்வாகம் சுகாதார வளாகத்தை சீரமைத்து திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -ராஜகோபால், பள்ளிகொண்டா.

மேலும்
ஆதரவு: 29
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#59182

சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர்

சாலையோரம் தேங்கி நிற்கும் கழிவுநீர்கழிவுநீர்

வேலூர் சதுப்பேரி ஏரி அருகே சர்வீஸ் சாலை ஓரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் சீராக செல்லாமல் மழைக்காலங்களில் சாலையில் ஓடைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். கால்வாயை தூர்வாரினால் கழிவு நீர் சீராக செல்லும் என அவ்வழியாக செல்லும் மக்கள் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயகாந்தன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:26 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#59181

குளம்போல் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

காட்பாடி கழிஞ்சூர் ரோடு பஸ் நிறுத்தம் எதிரே பெட்ரோல் பங்க் சுற்றுச்சுவரையொட்டி உள்ள கால்வாயில் கழிவுநீர் சரியாக ஓடாததால் சாலையில் வழிந்தோடி காங்கேயநல்லூர் சாலையில் உள்ள ஒரு வங்கி வாசலில் குளம்போல் தேங்குகிறது. பெட்ரோல் பங்க் சுற்றுச்சுவரையொட்டி உள்ள கால்வாயை சரி செய்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்நசீர், காங்கேயநல்லூர் ரோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:25 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#59180

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

அடுக்கம்பாறையை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தில் ‘எஸ் வளைவு’ பகுதியில் தார் சாலையில் கழிவுநீர் ஓடுகிறது. அந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கழிவுநீரை மிதித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. சாலையில் கழிவுநீர் ஓடுவதை ஊராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். -சின்னசாமி, மூஞ்சூர்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:23 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#59179

அங்கன்வாடிக்கு சொந்த கட்டிடம் தேவை

மற்றவை

பள்ளிகொண்டா அருகே வெட்டுவாணம் பிள்ளையார் கோவில் தெருவில் வீடு ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கு, குழந்தைகள் தாராளமாக அமர்ந்து படிக்க போதிய இடவசதி இல்லை. அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மனோகர், வெட்டுவாணம்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:21 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#59178

தண்ணீர் குடிக்க டம்ளர் வைக்கப்படுமா?

தண்ணீர்

குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. ஆனால், தண்ணீரை பிடித்துக் குடிக்க டம்ளர் இல்லை. சங்கிலி இணைப்புடன் கூடிய டம்ளர் வைத்தால் தண்ணீரை பிடித்து குடிக்க வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமார், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:18 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#59177

கால்வாய் வசதி தேவை

கழிவுநீர்

வாலாஜா-அணைக்கட்டு சாலையோரம் இரு பகுதிகளிலும் பாரதி நகர், பெரியார் நகர், இந்திரா நகர், புதிய எம்.ஜி.ஆர். நகர் பகுதிகள் உள்ளன. அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கால்வாய் வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய ரேஷன் கடை பகுதியில் இருந்து மேம்பாலம் வரை கழிவுநீர் கால்வாய் கட்டப்பட வேண்டும். -மூர்த்தி, வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:17 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#59176

பூங்கா எதிரே குப்பைகள் கொட்டும் அவலம்

பூங்கா எதிரே குப்பைகள் கொட்டும் அவலம்குப்பை

அரக்கோணம் சுவால்பேட்டை தர்மராஜா கோவில் பகுதியில் இருக்கும் வேதாசலம் முதலியார் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அந்தப் பூங்கா எதிரே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவில் பூங்காவுக்குள் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் பூங்காவை புதுப்பித்து, தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுந்தரவள்ளி, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:15 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#59175

பூ மார்க்கெட் ரோடு ஆக்கிரமிப்பு

சாலை

வாலாஜா பஸ் நிலையம் எதிரே பூ மார்க்கெட் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த ரோடு இருபுறமும் ஆக்கிரமிப்பால் ஒரு ஆட்டோ கூட செல்ல முடியாத வகையில் ஆக்கிரமிப்பால் குறுகி விட்டது. அந்த வழியாக செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரோடு ஆக்கிரமிப்பை அகற்றி அகலப்படுத்த வேண்டும். -கார்த்திகேயன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:14 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#59172

ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும்

மற்றவை

சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிவலம் ஊராட்சியில் அரசின் திட்டங்கள், சேவைகள் என்னென்ன உள்ளது? எனத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மக்களுக்கு எழும் சந்தேகங்களை ஊராட்சி செயலாளரிடம் கேட்க சென்றால், அவர் சரியான விளக்கம் அளிப்பது கிடையாது. மேலும் மரியாதை குறைவாகவும், ஒருமையில் பேசியும் அவமானம் செய்கிறார். இதுபோன்ற நபர்களால் உண்மையான பயனாளிகள் பயன்பெற முடியுமா? எனத் தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளரை பணி மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தராஜ்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2025 6:12 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#59170

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

வாலாஜா-அணைக்கட்டு சாலை வழியாக குடிமல்லூர், சாத்தம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, திருப்பாற்கடல் வரை இருசக்கர வாகனங்கள் அதிகளவில் பகலிலும், இரவிலும் சென்று வருகின்றன. அந்த சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் வாலாஜா பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வாலாஜா மேம்பாலம் அருகில் அணைக்கட்டு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -திருக்குமரன், அணைக்கட்டு ரோடு.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick