Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2025 5:17 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#58230

மாடுகள் கட்டும் இடமாக மாறிய வாரச்சந்தை

மாடுகள் கட்டும் இடமாக மாறிய வாரச்சந்தைமற்றவை

வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தில் தேசூர் செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து கட்டப்பட்ட வாரச்சந்தை தற்போது மாடு கட்டும் தொழுவமாக மாறி விட்டது. பெரிய அளவில் நடந்த வாரச்சந்தை தற்போது நடக்கவில்லை. அதிகாரிகள் வாரச்சந்தை கட்டிடத்தை சீரமைத்து விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக்கொள்கிறேன். -சண்முகானந்தம், சமூக ஆர்வலர், மழையூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:15 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#58228

சிறுபாலம் சேதமாகி பள்ளம்

சிறுபாலம் சேதமாகி பள்ளம்சாலை

ஆரணி பழைய பஸ் நிலைய வெளி வளாகத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாய் மேல் போடப்பட்ட சிறுபாலம் சேதமாகி திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் தினமும் வெளியே வரும் பஸ்கள், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் சிக்குகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் கீழே விழுந்து ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆரணி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? -சிவானந்தம், ஆரணி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:13 PM GMT
K. RAJANAYAGAM | செங்கம்
#58226

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

செங்கம் சுற்று வட்டார கிராமங்களான மண்மலை, கரியமங்கலம், கொட்டகுளம், இறையூர் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையோர தள்ளுவண்டி கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகளில் இருந்து வீசப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அப்போது தெருநாய்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணப்பன், செங்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:09 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58219

குடிநீர் கிணறுக்கு மூடி போட வேண்டும்

கழிவுநீர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் பேராயம்பட்டு மலையடிவாரத்தில் குடிநீர் கிணறு உள்ளது. அங்கிருந்து தண்ணீர் எடுத்து குழாய்கள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தக் கிணறுக்கு மூடி இல்லை. ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -அறிவழகன், தண்டராம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2025 5:07 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#58214

முழுமை பெறாத கிராம சேவை மைய கட்டிடப்பணி

மற்றவை

திருவண்ணாமலை ஒன்றியம் சின்னக்கல்லப்பாடி கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் கட்டுமானப் பணி முழுமை பெறவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிராம சேவை மைய கட்டிடத்தை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். -ராமையன், சின்னக்கல்லப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:08 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58053

மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறுமற்றவை

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாலை நேரங்களில் சாலையில் நின்று ஓய்வெடுக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்களை மாடுகள் அச்சுறுத்துகின்றன. எனவே மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிங்காரவேல், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:05 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#58051

நூலகத்துக்கு முறையான பாதை வசதி தேவை

நூலகத்துக்கு முறையான பாதை வசதி தேவைமற்றவை

குடியாத்தம் செதுக்கரை அசோக்நகர் அருகில் ரூ.6 லட்சத்தில் நூலகம் கட்டப்பட்டது. ஆனால், அது மெயின் ரோட்டில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ளது. அந்த நூலகத்துக்கு முறையான பாதை வசதி இல்லை. வாசகர்கள் நூலகத்துக்கு வந்தால் வாகனங்களை நிறுத்த வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை. நூலக வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:02 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#58049

மருத்துவமனையில் ஆவின் பாலகம் திறக்கப்படுமா?

மற்றவை

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு நோயாளிகளின் நலன் கருதி ஆவின் பாலகம் திறக்கப்படுமா? -சிவலிங்கம், சமூக ஆர்வலர், விண்ணம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58048

கால்வாய் சீரமைக்கப்படுமா?

கால்வாய் சீரமைக்கப்படுமா?கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி பள்ளி அருகில் பாலாற்றுக்கு செல்லும் வழியில், தெருவில் குறுக்காகச் செல்லும் சிறு கால்வாய் பாலத்தில் ஓட்டை விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தற்காலிகமாக பொதுமக்கள் கட்டைகளை வைத்து அடைத்து எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். ஓட்டையை அடைத்து கால்வாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58047

சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம்

சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம்சாலை

வேலூர் பைபாஸ் சாலையில் இருந்து காகிதப்பட்டறை செல்லும் சிமெண்டு சாலை நடுவில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரகதீஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58046

கால்களை பதம் பார்க்க காத்திருக்கும் ஆபத்து

கால்களை பதம் பார்க்க காத்திருக்கும் ஆபத்துசாலை

வேலூரை அடுத்த அரியூர் மின்வாரிய அலுவலகம் செல்லக்கூடிய மெயின் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கால் தவறி பள்ளத்தில் விழுந்து விடவும் அல்லது சிலாப்பில் உள்ள இரும்புக்கம்பிகள் கால்களை பதம் பார்த்து விடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரசேகரன், அரியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:53 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58042

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியில் ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick