Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Feb 2025 8:12 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#54128

மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை

மற்றவை

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாலாற்றில் இருந்து தினமும் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இரவில் மாட்டு வண்டிகளில் தான் அதிகமாக மணல் ஏற்றி கடத்தப்படுகிறது. மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையும், வருவாய்த்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். -மோகன்ராஜ், ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 8:10 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#54127

சாலை அகலப்படுத்தப்படுமா?

சாலை

வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ஊராட்சியில் இந்திரா நகர், அடுக்குமாடி குடியிருப்பு, லாலா ஏரி பெண்ணிவட்டம் முதல் வளையாம்பட்டு ஏ.டி.காலனி வரை உள்ள தார்சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. இதனால் அதில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தச் சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -வடிவேல், வளையாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 8:08 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#54126

தெருக்களில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

திருப்பத்தூர் டவுன் 2-வது வார்டு ஜெயாநகர் பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீர் தெருக்களிலும் தேங்கும் நிலை உள்ளது. எனவே இவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமாணிக்கம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 8:06 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#54125

மின்கம்பம் சேதம்

மின்கம்பம் சேதம்மின்சாரம்

காவேரிப்பாக்கம் ஒன்றியம் துரைபெரும்பாக்கம் கிராமத்தில் இருந்து ஆலப்பாக்கம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் வயல்வெளியில் உள்ள மின் மோட்டார்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒரு மின் கம்பம் பழுதடைந்து, சிமெண்டு பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும். -கஜேந்திரன், துரைபெரும்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 8:04 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#54124

குடிநீர் குழாய் உடைப்பு

தண்ணீர்

வாலாஜாபேட்டை பஸ் நிலைய பகுதியில் நகராட்சி எதிரில் 4 முனை சந்திப்பு சாலை உள்ளது. இதில் வாலாஜா போலீஸ் நிலைய சாலை தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. இந்தத் தெருவில் கடந்த 3 வாரங்களாக குடிநீர் குழாய் உடைந்து குடிதண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக வாலாஜா நகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை பழுதுப் பார்க்க வேண்டும். -சிங்காரம், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 8:02 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#54123

ஆபத்தான மின் கம்பம்

மின்சாரம்

அரக்கோணம் சுவால்பேட்டை திருத்தணி பிரதான சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே உள்ள சிமெண்டு மின் கம்பம் ஆபத்தான நிலையில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுந்தர்,அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:58 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#54121

நாய் தொல்லை

மற்றவை

ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாலை மற்றும் இரவில் டியூசன் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலை முடிந்து வரும் பெண்களை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் கடிக்க வருகின்றன. ஆற்காடு பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ஒரு சில இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சண்முகம், ஆற்காடு

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:55 PM GMT
K. RAJANAYAGAM | அணைக்கட்டு
#54120

இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர்

இடிக்கப்பட்ட தடுப்புச்சுவர்மற்றவை

உத்திரகாவேரி ஆற்றில் குருவராஜபாளையம் தடுப்பணை அருகே மராட்டிபாளையம் பிரதான கால்வாயில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. அந்தத் தடுப்புச்சுவரை விஷமிகள் இடித்து விட்டார்கள். இதனால் கால்வாய்க்கு ஆற்று தண்ணீர் வரவில்லை. 84 ஏக்கர் பரப்பளவு கொண்ட அகரம் ஏரிக்கும் நீர் வரத்து இல்லை. கால்வாய் கரை தடுப்புச்சுவரை இடித்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜா, மராட்டிபாளையம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:52 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54119

சாலையில் கோடுகள் வரையப்படுமா?

சாலையில் கோடுகள் வரையப்படுமா?சாலை

தேசிய நெடுஞ்சாலையில் வரையப்படும் வெள்ளை நிற கோடுகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் விபத்துகளை தடுக்க உதவுகின்றன. சமீபத்தில் பெருமுகை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அதில் வெள்ளை நிற கோடுகள் இன்னும் வரையப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கோடுகள் வரைய ேவண்டும். -சிவா, பெருமுகை.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:51 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54118

கால்வாயில் உடைப்பு

கால்வாயில் உடைப்புமற்றவை

வேலூரை அடுத்த அரியூர் நாராயணி பள்ளி அருகே மெயின் ரோட்டில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயில் சிமெண்டு கான்கிரீட் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே உள்ள பெயர் பதாகை உடைந்து பள்ளத்தை மூடியிருப்பது போல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாராயணன், அரியூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:49 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#54117

கால்வாய் சிலாப்புகள் சரி செய்யப்படுமா?

கால்வாய் சிலாப்புகள் சரி செய்யப்படுமா?சாலை

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே மண்டி தெரு ஆரம்பப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயின் மேற்பகுதியில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பெரிய கான்கிரீட் துண்டுகளாகக் கிடக்கின்றன. அதில் உள்ள இரும்புக் கம்பிகள் வெளியே நீட்டியவாறு ஆபத்தான நிலையில் உள்ளன. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவராமன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 7:41 PM GMT
K. RAJANAYAGAM | திருவண்ணாமலை
#54116

பூட்டியே கிடக்கும் கிராம சேவை மைய கட்டிடம்

மற்றவை

திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டிடப்பட்டு பூட்டியே கிடக்கிறது. அங்கு வைக்கோல் போர் போடப்பட்டுள்ளது. இரவில் அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கிராம சேவை மைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சிவா, பழையனூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick