குடிநீர் வினியோகம் செய்வார்களா?

Update: 2022-08-10 11:15 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சியில் மின்னல் நகர் பகுதியில் ஒடுகத்தூர் சாலையில் குடிநீருக்காக சிறுமின்விசை தொட்டி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் வசிக்கும் பலர் தொட்டியில் இருந்து குடிநீர்பிடித்து பயன்படுத்தி வந்தனர். அந்தத் தொட்டி தற்போது பழுதாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து பல முறை ஊராட்சியில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் தொட்டியை பழுதுப் பார்த்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

திருஞானம், மின்னல்நகர் அணைக்கட்டு

மேலும் செய்திகள்