குடிநீர் வீணாவதை சரி செய்ய வேண்டும்

Update: 2023-03-08 11:46 GMT


அரக்கோணத்தை அடுத்த வளர்புரம் கிராமம் நடுத் தெருவில் உள்ள குடிநீர் குழாய் துருப் பிடித்து உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி தெருவில் குளம் போல் தேங்கி வருகிறது. இதில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி அலுவலகத்திலும் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்