திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் வைக்கப்பட்டது. இது போதிய பராமரிப்பு இல்லாததால், கடந்த சில நாட்களாக செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் எந்திரத்தை சரி செய்து பொதுமக்களின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மதுரை, திருப்பூர்.