உத்தமபாளையம் போலீஸ் நிலையம் முன்பு சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உள்ளது. அதோடு குடிநீரும் மாசடைகிறது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும்.