ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-06-23 12:10 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி, அருகம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சாலை ஓரத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டியை தாங்கி நிற்கும் சிமெண்டு கட்டையானது தற்போது சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும்போது இந்த சிமெண்டு கட்டையானது இடிந்து தொட்டி கீழே விழுந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்