அவல நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2024-06-16 13:54 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர் சிவ சண்முகம் தெருவில் உள்ள சமூதாய நலக்கூடம் அருகில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த குடிநீர் தொட்டி 3 வருடங்களாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீர் எடுப்பதற்காக வெகுதூரம் செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்