குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-06-02 16:49 GMT
சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக பொதுமக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு அலைந்து திரிந்து வருகின்றனர். எனவே பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்