குடிநீர் வீணாகும் அவலம்

Update: 2024-05-26 17:59 GMT
பழனி பஸ்நிலையம் எதிரே குளத்து ரவுண்டானா பகுதியில் சாலையின் நடுவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. பல மாதங்களாக தண்ணீர் வீணாவதால் அந்த பகுதியில் சாலையே குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்