தண்ணீர் பற்றாக்குறை

Update: 2024-05-12 13:43 GMT

பெரம்பலூர் நகரப்பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவர்களின் அன்றாட தேவைக்காக உப்போடை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த தண்ணீர் குறைந்த அளவு வினியோகம் செய்யப்படுவதினால், இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்