குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2024-03-10 06:32 GMT


உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு உட்பட்ட விரிகோடு பஞ்சாயத்தில் வாதுக்கல் குளம் உள்ளது. இந்த குளத்தின் இரு கரைகளும் இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், குளத்தில் தண்ணீரும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி குளத்தை தூர்வாரி கரைகளை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோனீஷ், மானான்விளை.

மேலும் செய்திகள்