வீணாகும் குடிநீர்

Update: 2023-12-03 13:00 GMT

தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து தினமும் காலை நேரத்தில் குடிநீர் வெளியேறி செல்கிறது. இதன்காரணமாக சாலையோரத்தில் குடிநீர் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தேங்கி கிடக்கும் நீரால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்