மின்மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-10-01 17:12 GMT
கள்ளக்குறிச்சி அருகே திருநாவலூர் ஒன்றியம் உடையானந்தல் ஊராட்சியில் உள்ள வைப்பாளையம் கிராமத்தில் மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பழுதானது. ஆனால் இதுவரை மோட்டார் சரிசெய்யப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லை. மேலும் குடிநீர் தொட்டியின் கீழே உள்ள சிமெண்டு பூச்சுகள் உடைந்த நிலையில் உள்ளது. எனவே மின்மோட்டார் பழுதை சீரமைப்பதோடு, உடைந்த சிமெண்டு பூச்சுகளையும் சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்