குடிநீர் பிரச்சினை

Update: 2023-09-24 13:16 GMT

தஞ்சை டவுன் கரந்தை பகுதி கீரைக்காரத்தெருவில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய்களில் முறையாக தண்ணீர் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குடிநீருக்காக நீண்ட தூரம் செல்லக்கூடிய சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்