குழாய் இருந்தும் குடிநீர் வரவில்லை

Update: 2023-08-06 17:25 GMT

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ரமணமகரிஷி நகர், ஏழுமலையான் நகர், ஐஸ்வர்யா நகர், அங்காள ஈஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த குழாய்களில் குடிநீர் வரவில்லை. இதனால் தங்கள் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குடிநீர் குழாய் இணைப்புகளில் தண்ணீர் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்