தேங்கிநிற்கும் மழைநீரால் விபத்துகள்
திருப்பூரில் இருந்து காங்கயம் சாலையிலிருந்து ராக்கியாபாளையம் 4 ரோட்டில் இருந்து வலது புறம் சினிபார்க் தியேட்டர் அருகே ஒரு பல்பொருள் அங்காடி முன்பு குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி கடந்த 6 மாதமாக மூடப்படாமல் உள்ளது. இங்கு மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை கவனிக்காத சிலர் தேங்கி மழைநீர் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மண்ணை கொட்டி மூடி சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ரத்தினசாமி, திருப்பூர்.
94422 25500