நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-04 12:02 GMT
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பஜனை கோவில் தெருவில் 7 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் சித்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இது நாள் வரை இந்த இயந்திரம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே காட்சி பொருளாகவே இருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்