சாலையில் தேங்கி நிற்கும்குடிநீர்
திருப்பூர் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்ட வளையங்காடு பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டி மூடப்பட்ட நிலையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் அப்பகுதி முழுவதும் தேங்கி நின்றது.வாகனங்கள் செல்ல முடியவில்லை.
இதனை கேள்விபட்ட சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் வந்து பார்த்து விட்டு தற்காலிக சீரமைத்து சென்றார். இதனை நிரந்தரமாக சரிசெய்ய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பகுதிக்கு பஸ்கள் வந்து பல மாதங்கள் ஆகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் பஸ் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.கே.அழகர்,வளையங்காடு.
94423 98892