குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர் தாராபுரம் ரோடு செட்டிபாளையம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாமல் சாலையோரத்தில் ஓடுகிறது.
இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்யவும், கழிவுநீர் கால்வாய் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்,திருப்பூர்.
6381387294