சேதமடைந்த கால்வாய் சீராகுமா?

Update: 2022-08-06 13:29 GMT

சேதமடைந்த கால்வாய் சீராகுமா?

திருப்பூர் ராயபுரம் அருகே பெத்திசெட்டிபுரம் உள்ளது. இங்குள்ள கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாயின் கரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் பாய்ந்து செல்வது தடைபடுவதுடன், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இந்த கால்வாய் சேதமடைந்து பல மாதங்கள் ஆகின்றன. அப்படியிருந்தும் கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே இனியாவது கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

பார்த்திபன், கல்லம்பாளையம்.

98417 49158

மேலும் செய்திகள்