கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புதூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் 3 மாதங்களாக குடிநீர் வீணாகி கொண்டிருக்கிறது. மேலும் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருப்பதால் அந்த பகுதி சாக்கடையாக மாறி உள்ளது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் இங்கு தொடக்கப்பள்ளி அருகில் உள்ளதால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும்.
-.மாதேஸ், புதூர்புங்கனை, கிருஷ்ணகிரி.