குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படும?

Update: 2023-09-06 18:27 GMT
கடலூர் மாநகராட்சி 22-வது வார்டு நெப்போலியன் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல ஆண்டுகள் ஆவதால், குடிநீர் கலங்களாகவும், சுகாதாரமின்றியும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்