சாலையில் குளம்போல் தேங்கும் மழைநீர்

Update: 2023-09-06 18:26 GMT
கடலூர் பூ மார்க்கெட் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து பொிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்